Thursday, April 29, 2010

சும்மா பதிவுகளை வேடிக்கை பார்க்க வந்தவளை கொசுவத்தி சுத்த வெச்சுட்டாங்க...
இனிமே முடியாது ஆரம்பிக்க வேண்டியது தான்.
பழைய நினைவுகள் என்றதும் கலங்கிய புகை மூட்டமாய் சிறு வயது தீபாவளி அதிகாலை தான் ஞாபகத்திற்கு வருகிறது. கையெல்லாம் மருதாணி, வீடு முழுக்க காய்ந்த மருதாணி  உதிர "என் கை எவ்வளவு பத்திருக்கு?" பார்த்தது நினைவில் உள்ளது.
பாட்டு கற்கிறேன் பேர்வழி என்று வகுப்பு முழுவதும் காரணமின்றி  சிரித்து திட்டு வாங்கியது, பள்ளியில் பாதி நாட்கள்  வகுப்புக்கு வெளியே (ஹோம் வொர்க் செய்யாததால்) வெளியே முட்டி போட்டது, கிரிக்கெட் பார்ப்பதற்காக  வயிற்று வலி என்று லீவ் போட்டது, பாட புத்தகத்தில் உள்ள அத்தனை பேரையும் திட்டி தீர்த்தது, தோழிகள் புடை சூழ பள்ளியிலேயே கல்லூரி போன்று கொட்டம் அடித்தது (கல்லூரி யில் செய்த கலாட்டா வை படிக்க... வேறு வழியில்லை, நீங்கள் சிறிது காலம் காத்திருந்து தான் ஆக வேண்டும்!). "உன் தங்கை எப்படி படிக்கிறா பாரு? உனக்கு வெக்கமா இல்லை?" ஸ்கூல் பிரேயர் மாதிரி தினமும் ஆசிரியைகள் சொன்னது, அதையும் மீறி அடங்கா பிடாரியாய் வளர்ந்தது என சிறு வயது நினைவுகளே சிரிப்பை வரவழைக்கின்றன.
என்னுடைய குணாதிசயமாக நான் நினைக்கும் விடாத சிரிப்பு குறைந்துதான் போய்விட்டது.
இப்பொழுதெல்லாம்  ஒரு நாளைக்கு இரண்டு முறை சிரிப்பேனோ என்னவோ?
காகித ஓடம் கடலலை மேலே .... பாட்டு மாதிரி பெரிய துக்கம் ஒன்றும் இல்லை. ஆனால் சிரிப்பதற்கு காரணம் தேவைப்படுகிறது.
முன்பெல்லாம் அடக்க மாட்டாத சிரிப்பு. அம்மா ஸ்பீட் பிரேக்கர் போட்டு கொண்டே இருக்க வேண்டும். எப்பொழுது எங்கே போயிற்று? மீட்டு எடுக்கத்தான் வந்துள்ளேன்.

No comments:

Post a Comment